சனி, 16 ஆகஸ்ட், 2014

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்குக

     Theekkathir  செய்தி                   

ஈரோடு,ஆக.16- பிஎஸ்என்எல் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோட்டில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெருந்துறை, பவானி பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 16-ம் தேதி ஆகியும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே கான்ட்ராக்டரை உடனே பட்டுவாடா செய்ய உத்திரவிட வலியுறுத்தியும், மாவட்டம் முழுவதும் பிரதிமாதம் 7-ம் தேதிகுள் அனைவருக்கும் சம்பளம் வழங்கிட கோரியும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்ப்ந்த தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஈரோடு ஜிஎம் அலுவலகம் முன்பு 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்த் தலைவர் என்.சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி கண்டன முழக்கம் எழுப்பினார். கோரிக்கைகளை விளக்கி மாநில உதவித் தலைவர் எல்.பரமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

ஞாயிறு, 9 மார்ச், 2014

4 வது மாவட்ட செயர்குழு
----------------------------------------

நாள் :   09/03/2014

இடம் :நில அளவயர் சங்கக் கட்டிடம் தாலுக்கா அலுவலகம், ஈரோடு.

தலமை : தோழர்.N.சண்முக வேல் துணை தலைவர் TNTCWU

வரவேற்புரை : தோழர்.K.பழனிச்சாமி மாவட்ட செயலர் TNTCWU

துவக்கவுரை : K.விஸ்வநாதன் மாநில பொருளர் TNTCWU



ஆய்படு பொருள் 

1) மார்ச் 26 தர்ணா தாயரிப்பு 
2) பயணப்படிக்கான இயக்கம்
3) அடையாள அட்டை சம்பந்தமாக 
4) புதிய உறுப்பினர் சேர்க்கை
5) கிளைமாநாடு நடத்துவது
6) 5 ம் தேதிக்குள் சம்பளம் பெறுவது
7) இன்னபிற தலைவர் அனுமதியுடன் 

மாவட்ட செயலரின் தொகுப்புரை, மாவட்ட  ,கிளை நிர்வாகிகள் உரைக்கு பின் 

வாழ்த்துரை 

தோழர். செல்லமுத்து மாவட்ட துணை தலைவர் TNTCWU
                          தோழர்.சுந்தரக்கண்ணன் மாநில துணை செயலர் TN TCWU
                          தோழர்.C.பரமசிவம் SNAI 
                          தோழர் L.பரமேஸ்வரன் மாவட்ட செயலர் BSNLEU 

நன்றியுரை S.சரவணன் மாவட்ட பொருளர் TNTCWU