வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

ஈரோடு மாவட்டத்தின் 5 வது மாவட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள்



ஈரோடு மாவட்டத்தின் 5 வது மாவட்ட மாநாடு

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம்
ஈரோடு மாவட்டம்.

எழுச்சியுடன் துவங்கி இனிதாய் முடிந்த
5வது மாவட்ட மாநாடு

அன்பார்ந்த தோழர்களே !

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஈரோடு மாவட்டத்தின் 5 வது மாவட்ட மாநாடு 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் தோழர்.எஸ்.குமரேசன் நினைவரங்கம், பெரியார் மன்றம், ஈரோட்டில் தோழர். N.சண்முகவேல், மாவட்டத் தலைவர் (பொறுப்பு), TNTCWU தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் முதல் நிகழ்வாக தோழர் N.சின்னையன், மாநில அமைப்புச் செயலர், AIBDPA தேசியக்கொடியேற்றி துவக்கி வைத்தார். பின்னர் தோழர். K.D.மாதேஸ் (எ) கார்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர், TNTCWU சங்க கொடியேற்றி தோழர்.M.சையத் இத்ரீஸ், மாவட்ட உதவிச் செயலாளர், TNTCWU  கோஷங்களுடன் கொடியேற்ற நிகழ்ச்சியானது நடைபெற்றது.

மாநாட்டில் அஞ்சலி தீர்மானத்தை தோழியர்.S.சத்யப்பிரியா, மாவட்டத் துணைத்தலைவர், TNTCWU வாசித்தார். தலைமையுரை நிகழ்த்திய தோழர். N.சண்முகவேல், மாவட்டத் தலைவர், TNTCWU  BSNL நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த  ஊழியர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்கிற பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி உரையாற்றினார். தோழர்.K.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர், TNTCWU மற்றும் வரவேற்பு குழு தலைவரும், BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர்.L.பரமேஸ்வரன் வரவேற்புரையில்  மாநாட்டில் கலந்து கொண்ட அத்துனை தலைவர்களையும் தோழர்களையும் வரவேற்று மேலும் இம்மாநாட்டில் கலந்து கொண்ட நமது ஈரோடு மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளர் உயர்திரு. K.S.வேங்கிட சுப்பிரமணியன், ITS  அவர்களையும், DGM (Admn) திரு.P.தங்கராஜு அவர்களையும் வரவேற்று உரை நிகழ்தினார்கள்.

சிறப்புரையாக நமது ஈரோடு மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளர் உயர்திரு. K.S. வேங்கிட சுப்பிரமணியன் ITS அவர்களும், DGM (Admn) திரு.P.தங்கராஜு அவர்களும் கலந்து கொண்டு BSNL வளர்ச்சியில் ஒப்பந்த தொழிலாளர்களின் பங்கு என்கிற தலைப்பில் ஒப்பந்த ஊழியர்களின் உரிமைகளும் சலுகைகளும் குறித்த நேரத்தில் கிடைத்திட நமது மாவட்ட நிர்வாகம் இதுவரை உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல் இனிமேலும் பெரும் பங்கு வகிக்கும் என தெரிவித்தனர். மேலும் BSNL நிறுவனத்தில் குறிப்பாக ஏர்செல் எனும் தனியார் மொபைல் சேவை முடங்கிவிட்ட போது நம்முடைய BSNL அதிகாரிகளும் ஊழியர்களும் மட்டுமல்லாமல் ஒப்பந்த ஊழியர்களும் மேற்கொண்ட பணிகள் தான் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக நம்முடைய ஈரோடு மாவட்டம் திகழ்ந்தது என்றும் தற்போது தனியார் நிறுவனங்களின் கடும் போட்டி காரணமாக வருவாயை இழந்து வரும் நமது BSNL நிறுவனத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு சிறப்பான சேவை செய்வதின் மூலம் வருவாயை மேம்படுத்தலாம் என்றும் உரை நிகழ்தினார்கள். 

மேலும் சிறப்புரையாக BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய கன்வீனர் தோழியர்.V.P.இந்திரா அவர்கள் ஒப்பந்த ஊழியர்களின் தற்போதய நிலைமை குறித்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை குறித்தும் உரை நிகழ்தினார். மேலும் BSNL நிறுவனத்தில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை மற்றும் குழந்தை பராமரிப்பு விடுமுறைகள் உத்தரவினை பெற்றதை போலவே ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கும் உத்தரவினை பெறுவோம் என்கிற கோரிக்கைகளோடும் புதுச்சேரியில் நடைபெறும் BSNL உழைக்கும் மகளிர் மாநில மாநாட்டில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் மகளிர் ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உரை நிகழ்தினார்கள்.
    
வாழ்த்துரையாக தோழர்.V.மணியன், மாநில அமைப்புச் செயலர், BSNLEU,  தோழர்.P.சின்னச்சாமி, மாவட்டச் செயலர், AIBDPA மற்றும் தோழியர்.S.வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர், TNTCWU மற்றும் DYFI மாவட்டச் செயலர். தோழர்.சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள். 

மேற்படி நிகழ்வுகளாக காலை முதல் மதியம் வரை முற்பகல் நிகழ்ச்சிகள் இனிதாக நடைபெற்றது. மதிய உணவு இடைவேளையில் வரவேற்பு குழுவின் சார்பில் சிறப்பானதொரு மதிய விருந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இடையிடையே தேநீர் விருந்தும் கொடுத்து மாநாட்டை சிறப்பாக நடத்திய வரவேற்பு குழுவின் வரவேற்புகளும் உபசரிப்புகளும்  நிச்சயம் நாம் அனைவரும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

பிற்பகல் நிகழ்வுகளாக ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்து நிதி நிலை அறிக்கையும் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
பின்னர் உரை நிகழ்த்திய TNTCWU மாநிலச் செயலர் தோழர்.C.வினோத் குமார் ஒப்பந்த ஊழியர்களின் தற்போதய நிலைமை குறித்தும் எதிர்கால கடமைகளை குறித்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை குறித்தும் விளக்கி உரை நிகழ்தினார்.
அமைப்பு நிலை விவாதத்தில் அனைத்து கிளைச் செயலர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். வரவேற்பு குழு தலைவரும், BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர்.L.பரமேஸ்வரன் தொகுப்புரையாக உரை நிகழ்த்தினார். 

இம்மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்

·         BSNL நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு Re-categorization of work பணியின் தன்மைக்கேற்ப Skilled, Semi skilled & unskilled என்று உயர் ஊதியம் வழங்க வேண்டும்

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக நல பாதுகாப்பு அம்சங்களான EPF & ESI முறைப்படுத்த வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 7ஆம் தேதிக்குள் சம்பளம் பெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் விடுமுறையில்லாமல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு விடுமுறைகளை வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை (Gratuity)  வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் மகளிர் ஒப்பந்த ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறையும் குழந்தைப் பராமரிப்பு விடுமுறையும் வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தின் வருவாயை கணக்கிட்டு ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

·         மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினையும், Fixed Term Employment என்கிற தொழிளார்களுக்கு எதிரான சட்ட மசோதாவையும்  இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

·         CLC உத்தரவான ‘B’ City category மாநகராட்சி எல்லையிலிருந்து 15 கி.மீ க்கு பொருந்தும் என்கிற உத்தரவை தமிழ் மாநிலம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் அமுல் படுத்திட வேண்டும்.

·         BSNL தனியார் மயம் கூடாது. BSNL டவர்களை தனியாக பிரித்து தனி டவர் கம்பெனி என்று சொல்லி தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிடவேண்டும்.
மாநாட்டு தீர்மானங்களாக ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறாக மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்று மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் மாவாட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                                           தோழர்.M.சையத் இத்ரீஸ், பெருந்துறை

உதவித் தலைவர்கள்                        தோழர்.N.சண்முகவேல், DE (Extl)
  தோழியர்.S.சத்யப்பிரியா, T/B, ERD
  தோழர்.கருப்பண்ணன், பவானி
  தோழர்.K.சோமசுந்தரம், மூலனூர்

செயலர்                                            தோழர்.K.பழனிச்சாமி, DE (Extl)

உதவிச் செயலர்கள்கள்                   தோழர்.L.பரமேஸ்வரன், DS BSNLEU
 தோழர்.சுப்பிரமணியன், ஓலப்பாளையம்
 தோழர்.S.கோபால், பெருந்துறை
 தோழியர்.சித்ரா, DE (Extl)

பொருளாளர்                                    தோழர்.S.சரவணன், T/B ERD

உதவிப் பொருளாளர்                      தோழர்.R.தம்பிக்கலையன், DE (Extl)

அமைப்புச் செயலர்கள்கள்              தோழர்.T.மாரிமுத்து, தாராபுரம்
 தோழர்.கார்த்தி, சத்தி
 தோழர்.விஸ்வநாதன், DE (Rural)
 தோழர்.N.தங்கவேல், காங்கயம்
 தோழர்.வெள்ளியங்கிரி, கோபி
 தோழர்.சண்முக சுந்தரம், ஈரோடு OFC
 தோழர்.சக்திவேல்,அந்தியூர்

புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற தோழர்.M.சையத் இத்ரீஸ் தணிக்கையாளராக தோழர்.L.பழனிச்சாமி, OS, பவானி அவர்களை நியமித்தார்.

வாழ்த்துரையில் BSNLEU மாநில உதவிச் செயலாளர் தோழர். சுப்பிரமணியன் புதிய மாவட்ட நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

மாவட்டத் தலைவர் தோழர்.எம்.சையத் இத்ரீஸ் நன்றியுரை கூறி மாநாட்டை முடித்து வைத்ததுடன் வரவேற்பு குழு தலைவரும், BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான தோழர்.L.பரமேஸ்வரன் அவர்களின் விண்ணதிரும் கோஷங்களோடு இம்மாநாடு இனிதே நிறைவடைந்தது.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்

தோழமையுடன்

     M.சையத் இத்ரீஸ்                            K.பழனிச்சாமி,                              S.சரவணன்
    மாவட்டத் தலைவர்                        மாவட்டச் செயலர்                  மாவட்டப் பொருளாளர்
      TNTCWU                                TNTCWU                              TNTCWU